யாழ்.பொன்னாலையில் பொதுமக்களின் வீடுகளுக்குள் இராணுவ சீருடைகளுடன் புகுந்தோர் தாக்குதல்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொன்னாலையில் பொதுமக்களின் வீடுகளுக்குள் இராணுவ சீருடைகளுடன் புகுந்தோர் தாக்குதல்..!

இராணுவ சீருடை மற்றும் ஆயுதங்களுடன் இராணுவ வாகனங்களில் வந்த சுமார் 10ற்கும் மேற்பட்டோர் பொன்னாலை மேற்கு மக்களின் வீடுகளுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

நேற்று இரவு 11.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பிரதேசசபை உறுப்பினர் ந.பொன்ராசா கூறுகையில், நான் சம்பவ இடத்திற்கு சென்றபோது கிராமமே மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியிருந்தது. 

படைச் சீருடை அணிந்திருந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள் நின்றனர். அவர்கள் ஆயுதங்களை வைத்திருந்தனர். அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய நான் மக்களைத் தாக்கியமை தொடர்பில் கேள்வியெழுப்பினேன். 

நான் இராணுவச் சீருடை அணிந்தவர்கள் என்னுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நான் பொலிஸாருக்கு அழைப்பு எடுத்து அவர்களை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தேன். இதையடுத்து படைச் சீருடை அணிந்தவர்கள் ஓடித்தப்பினர். 

12 மணிக்கு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் அதிகாலை நெருங்கியும்  பொலிஸார் வருகைதரவில்லை என அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு