அதிகாலையில் கோவிலை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கைவரிசை! பல லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு..

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் கோவிலை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கைவரிசை! பல லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு..

மாங்குளம் பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தை உடைத்து தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 

மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாலமரத்தடி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்று (15) அதிகாலை வேளை கதவினை உடைத்த கொள்ளையர்கள் அம்மனின் தங்க நகைகள் சுமார் 18 பவுணுக்கு மேல் கொள்ளையடித்து சென்றுள்ளதாக 

ஆலய நிர்வாகியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் தடயவியல் பொலிசார் மோப்ப நாய்கள் சகிதம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு