யாழ்.மாவட்டத்தில் 70 பேர் உட்பட வடக்கில் 104 பேருக்கு தொற்று! தொடரும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 70 பேர் உட்பட வடக்கில் 104 பேருக்கு தொற்று! தொடரும் அபாயம்..

யாழ்.மாவட்டத்தில் 70 பேர் உட்பட வடக்கில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 581 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாவட்டத்தில் 70 பேருக்கு தொற்று.

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 13 பேர்,

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 07 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 09 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

முல்லைத்தீவில் 3 பேருக்கு தொற்று.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 07 பேர், 

வவுனியா மாவட்டத்தில் 16 பேருக்கு தொற்று.

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 10 பேர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், 

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன், பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு