நல்லுார் இளைஞர் கழக சம்மேளனம் 303 பைந்து இரத்தம் தானமாக வழங்கி சாதனை!

ஆசிரியர் - Editor I
நல்லுார் இளைஞர் கழக சம்மேளனம் 303 பைந்து இரத்தம் தானமாக வழங்கி சாதனை!

யாழ்.மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இளைஞர் சம்மேளனம், பிரதேச இளைஞர் சம்மேளனங்கள், பொது அமைப்புக்கள் பங்களிப்புடன் 30 நாட்களில் 1000 குருதி கொடையாளர்களை இணைக்கும்,

“உதிரம் கொடுத்து உயிர்கள் காப்போம்” எனும் தொனிப்பொருளிலான செயற்றிட்டத்தில் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஒழுங்கமைப்பில் இன்று 18வது இரத்ததான முகாம் யாழ்ப்பாண இளைஞர் பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் நல்லூர் பிரதேச சம்மேளனம் ஆகியவற்றின் இணைப்பில் நடைபெற்றுள்ளது. 

இந் நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணண், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப.மயூரன், நல்லூர் பிரதேச சபை உப தவிசாளர் ஜெயசுரன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தனகோபி மற்றும் துவாரகன், 

ஈழமக்கள் ஜனநாயககட்சி நல்லூர் அமைப்பாளர் ரவீந்திரதாசன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன், நல்லூர் சம்மேளன தலைவர் சி.பிரணவன், யாழ்.மாவட்ட சம்மேளன உப தலைவர் சி.துவாரகன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சூரிய பிரகாஸ், 

நல்லூர் இளைஞர்சேவை உத்தியோகத்தர் யுவராஜ், சாவகச்சேரி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீஞனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர். இக் காலகட்டத்திலும் இவ் இரத்ததான முகாமில் இளைஞர்கள், 

யுவதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்துள்ளனர். இதேவேளை யாழ்.மாவட்ட இளைஞர் பாராளுமன்ற ஒன்றிய போட்டிக்கு நல்லுார் இளைஞர் கழக சம்மேளனம் 303 இரத்த பைந்துகளை 

தானமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு