நாட்டில் அதிகளவில் சிறுவர்களும் தொற்றுக்குள்ளாகின்றனர்! பாதுகாப்பு பெறுவது எப்படி? குழந்தை நல வைத்திய நிபுணர் க.அருள்மொழி..

ஆசிரியர் - Editor I

நாட்டில் குழந்தைகளும் அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் நிலையில் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட முக கவசம் அணியலாம். என யாழ்.போதனா வைத்தியசாலை குழந்தைகள் நல வைத்திய நிபுணர், வைத்திய கலாநிதி க.அருள்மொழி அறிவுறுத்தியிருக்கின்றார். 

யாழ் போதனா வைத்தியசாலையின் மாவட்ட மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் குறைந்தத அதிகரித்து வரும் நிலையில் குழந்தைகளையும் அதிகளவில் பாதிக்கின்றது.

குழந்தைகளைப் பொறுத்தவரையில் நோய் நிலைமை தொடர்பில் தாய்தான் முதல் மருத்துவராக கருதப்படுகிறாள். ஏனெனில் குழந்தையின் நடமாட்டம் அன்றாட செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் வித்தியாசமான செயற்பாடுகளை உடன் அறிந்து கொள்பவளாக தாய்தான் விளங்குகிறாள்.

இலங்கையில் 12வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்ற தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. உலக நாடுகள் சிலவற்றில் மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் 

குழந்தையில் சோர்வு, சிறுநீர் வெளியேறும் அளவு குறையும், நீர் ஆகாரங்களில் விருப்பமின்மை, வாந்தி மற்றும் மூச்சு விடுதலில் சிரமம் ஆகியன அறிகுறிகளாகக் காணப்படும். ஆகவே இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு