யாழ்.கொடிகாமத்தில் 17 பேருக்கு தொற்று! மீண்டும் கொடிகாமம் சந்தை கொத்தணி உருவாகும் அபாயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமத்தில் 17 பேருக்கு தொற்று! மீண்டும் கொடிகாமம் சந்தை கொத்தணி உருவாகும் அபாயம்..

யாழ்.கொடிகாமம் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். 

கொடிகாமம் பகுதியில் சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கொடிகாமம் சந்தை 

மற்றும் அதனை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த 84 பேருக்கு நேற்று முன்தினம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன.

அவற்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தை வியாபாரிகள் உட்பட்டவர்களே தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு