யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 86 பேர் உட்பட வடக்கில் 138 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 86 பேர் உட்பட வடக்கில் 138 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 86 பேர் உட்பட வடமாகாணத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 29 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 12 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 08 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 06 பேர், இளவாலை பிரதேச வைத்தியசாலையில் 05 பேர், 

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இருவர், 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், 

முல்லைத்தீவு 

புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர்,மு ல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 06 பேர், 

கிளிநொச்சி 

பளை பிரதேச வைத்தியசாலையில் 06 பேர், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் (மரணம்), கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் (ஒருவர் மரணம்), 

வவுனியா 

வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் 

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 07 பேர், முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

.அவர்களுடன் கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு