யாழ்.பருத்தித்துறை - பழவத்தையில் 5 பேருக்கு கொரோனா தொற்று..! பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் சுகாதார பிரிவு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - பழவத்தையில் 5 பேருக்கு கொரோனா தொற்று..! பொதுமக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் சுகாதார பிரிவு நடவடிக்கை..

யாழ்.பருத்தித்துறை - பழவத்தை பகுதியில் இன்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கிராமத்தில் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று அறிகுறிகளுடன் சிலர் காணப்பட்ட நிலையில் கிராம மக்கள் சுகாதார பிரிவுக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனடிப்படையில் இன்று காலை

சுகாதார பிரிவினர் அன்டிஜன் பரிசோதனை நடத்தியிருந்தனர். இதன்போது 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு