யாழ்.பொலிகண்டியில் கடற்படை அதிரடி! பல கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் 3 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பொலிகண்டியில் கடற்படை அதிரடி! பல கோடி பெறுமதியான போதைப் பொருட்களுடன் 3 பேர் கைது..

யாழ்.குடாநாட்டுக்குள் கடத்திவரப்பட்ட சுமார் 2கிலோ கிராம் 300 கிறாம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 130 கிலோ கிராம் கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள ஜஸ் போதைப்பொருள் சுமார்  2கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதி உடையது எனவும், கஞ்சா போதைப்பொருளின் பெறுமதி 2 கோடியே 40 லட்சம் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர 

பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த கடத்தல் கடற்படை வல்வெட்டித்துறை பொலிஸ் இணைந்து 

முறியடிக்கப்பட்டது என்று கடற்படையினர் குறிப்பிட்டனர். சந்தேக நபர்கள் 38, 34, 28 வயதுடைய மாங்குளம், இரணைமடு மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் கூறினர்.

கடற்படையினரின் வழமையான ரோந்து நடவடிக்கையின் போது பொலிகண்டி கடற்கரை வீதியில் வைத்து  வாகனம் ஒன்றில் ஏற்ற முற்பட்டபோது போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. 

அவற்றை கடத்த முற்பட்டனர் என்று மூவர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர்கள் மூவரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். வல்வெட்டித்துறை பொலிஸ் மேலதிக விசாரணை செய்துவருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு