யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மாவட்டத்தில் 53 பேர் உட்பட வடக்கில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மாவட்டத்தில் 53 பேர் உட்பட வடக்கில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 58 பேர் உட்பட வடக்கில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 47 பேர் உட்பட வடக்கில் 90 பேருக்கு தொற்று உறுதியானது. 

யாழ்.மாவட்டத்தில் 47 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 12 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிரலில் ஒருவர்,முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 20 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 13 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் 06 பேர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், வவுனியா மாவட்டத்தில் 06 பேர்வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 12 பேர், வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூட முடிவுகளின்படி யாழ்.மாவட்டத்தில் 11 பேர் உட்பட வடக்கில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், 

பளை பிரதேசத்தில் 03 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 03 பேர்,

முழங்காவில் கடற்படை முகாமில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு