யாழ்.மாவட்டத்தில் 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு தொற்று! தொடரும் தீவிர அபாயம், மக்கள் அவதானத்துடன் நடப்பது சிறந்தது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு தொற்று! தொடரும் தீவிர அபாயம், மக்கள் அவதானத்துடன் நடப்பது சிறந்தது..

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 100 பேர் உட்பட வடக்கில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சுமார் 359 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

யாழ்.மாவட்டத்தில் 100 பேருக்கு தொற்று.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 33 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 17 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 13 பேர், 

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 05 பேர், நொதேர்ன் சென்ரல் ஹொஸ்பிரலில் ஒருவர், 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாயைில் 02 பேர், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 06 பேர், 

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், 

மன்னார் மாவட்டத்தில் 05 பேருக்கு தொற்று.

மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 12 பேருக்கு தொற்று.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், வுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 05 பேர், 

செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 05 பேருக்கு தொற்று.

 முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், 

கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கு தொற்று.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,

பளை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு