யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று!

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று!

யாழ்.மாவட்டத்தில் பிறந்து 1 நாளான குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் குறித்த குழந்தை பிறந்துள்ள நிலையில் நேற்று பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. 

அதன் முடிவுகளடிப்படையில் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

குழந்தையும் தாயும் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் 

அதன்போதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை கொரோனா பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு