யாழ்.பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு முன்பாக அமர்ந்து பக்தர் உணவு தவிர்ப்பு போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு முன்பாக அமர்ந்து பக்தர் உணவு தவிர்ப்பு போராட்டம்..!

யாழ்.பருத்தித்துறை சிவன் கோவிலில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆலயம் 14 நாட்கள் முடக்கப்பட்டதை கண்டித்து பக்தர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். 

ஆலய உள் வீதியில் பூஜைகளை நடாத்த அனுமதிக்ககோரியே பக்தர் ஒருவர் இன்று மதியம் தொடக்கம் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார். ஆலயத்தின் இன்றைய ஆறாம் திருவிழாவின் போதும் 

கடந்த ஐந்து நாட்களாகவும் வெளிவீதி சுவாமி ஊர்வலம் இடம்பெற்றுள்ளது. கொவிட் நிலைமை காரணமாக கோவில் திருவிழாக்கள் வெளிவீதி சுவாமி சுற்ற முடியாது. என அறிவிக்கப்பட்ட நிலையில் வெளிவீதி சுவாமி சுற்றியதன் காரணமாக, 

இன்று பருத்தித்துறை சுகாதாரப் பிரிவினர் கோவிலுக்கு சீல் வைத்துள்ளனர். குறித்த சிவன் கோவிலின் திருவிழாவை உள் வீதிப் பிரகாரம் பூசைகளை நடாத்தி திருவிழாவை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரியே பக்தர் ஒருவர் 

உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு