பல்கலைகழக பீடாதிபதிகள் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று! நிர்வாக பிரிவு முடக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக பீடாதிபதிகள் உட்பட 60 பேருக்கு கொரோனா தொற்று! நிர்வாக பிரிவு முடக்கப்பட்டது..

கிழக்கு பல்கலைகழக ஊழியர்கள் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்த்தர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில் பல்கலைக் கழக நிர்வாகக் கட்டடத் தொகுதி முற்றாக முடக்கப்பட்டுள்ளது. 

நிர்வாகக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் பல பணியாளர்களுக்கு கடந்த வாரமும், இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்ததை அடுத்து 

அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் பல்கலைக்கழகத்தைச் சேரந்த பீடாதிபதிகள் உட்பட சுமார் 60 க்கும் அதிகமானவர்களுக்கு 

கொரோனாத் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு