யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 50 பேர் உட்பட வடக்கில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 50 பேர் உட்பட வடக்கில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 351 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 69 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 50 பேருக்கு தொற்று.

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேர், 

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 07 பேர்,தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 03 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 03 பேருக்கு தொற்று

உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் (இராணுவத்தினர்) - 06 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு