யாழ்.தீவகம் வேலணையில் கொரோனா தீவிர அபாயம்! ஒரு வயதான இரு பெண் குழுந்தைகள் உட்பட 34 பேருக்கு தொற்று...

ஆசிரியர் - Editor I
யாழ்.தீவகம் வேலணையில் கொரோனா தீவிர அபாயம்! ஒரு வயதான இரு பெண் குழுந்தைகள் உட்பட 34 பேருக்கு தொற்று...

யாழ்.தீவகம் - வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு வயதான இரு பெண் குழந்தைகள் உட்பட சுமார் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவயதுடைய பெண் குழந்தைகள் இருவர், ஐந்து வயதுடைய பெண் சிறுமி 

ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர். இதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் வேலணையில் நேற்று மட்டும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு