யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு! மாவட்டத்தில் ஒரு நாளில் 3 மரணங்கள் பதிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு! மாவட்டத்தில் ஒரு நாளில் 3 மரணங்கள் பதிவு..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மாவட்டத்தில் நேற்று மட்டும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும் 

திருநெல்வேலியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்தனர். அத்துடன், 

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் நேற்று நண்பகல் உயிரிழந்தார்.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்வடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு