யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! அச்சுவேலியை சேர்ந்த 44 வயதானவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! அச்சுவேலியை சேர்ந்த 44 வயதானவர்..

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று நண்பகல் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் யாழ்.அச்சுவேலி பகுதியை சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது -44)என கூறப்படுகின்றது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர் சுயநினைவற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், 

இன்று நண்பகல் அவர் உயிரிழந்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு