யாழ்.சுன்னாகம் - குட்டிப்புலம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - குட்டிப்புலம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!

யாழ்.சுன்னாகம் - குட்டிப்புலம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றிலிருந்து குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

சுன்னாகம் மேற்கு ஊரெழுவை சேர்ந்த இராசதுரை சுதாகரன் (வயது 36) எனும் இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த தோட்ட கிணற்றில் சடலம் காணப்படுவதாக சுண்ணாக போலீசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் 

குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதனால் 

சில தினங்களுக்கு முன்னரே இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

அதேவேளை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் சூதாட்டம் இடம்பெறும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொலிஸார் வருவதாக கூறி

சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தப்பி ஓடியதாகவும் இதன்போது தவறி கிணற்றில் விழுந்து இவர் உயிரிழந்திருக்கலாம் என

அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு