யாழ்.மாவட்டத்தில் 65 பேர் உட்பட வடக்கில் 78 பேருக்கு தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 65 பேர் உட்பட வடக்கில் 78 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 65 பேர் உட்பட வடக்கில் 78 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில்  வடமாகாணத்தில் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 20 பேர் உட்பட 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி போதனா வைத்தியசாலையில் 10 பேர், பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் ஒருவர், 

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 05 பேர்,

இளவாலை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையில் 05 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

யாழ்.பல்கலைகழக ஆய்வுகூடத்தில் 

யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 23 பேர், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர்,

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு