அரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம்! சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..

ஆசிரியர் - Editor I
அரச ஊழியர்களை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் கடமைக்கு அழைக்க திட்டம்! சுகாதார அமைச்சின் கையில் இறுதி தீர்மானம்..

மிக குறைந்தளவான பணியாளர்களே பணிக்கு அழைக்கப்படுவதால் நிறுவன நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக 

அமைச்சு செயலர்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறியிருக்கும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு,

சகல அரச ஊழியர்களையும் எதிர்வரும் 1ம் திகதி முதல் மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக 

அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 

அரச நிறுவனங்களின் ஊழியர்கள், தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு