யாழ்.கரவெட்டியில் ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, பிரதேசம் முடக்கப்படலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கரவெட்டியில் ஆலய திருவிழாவில் கலந்துகொண்ட 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, பிரதேசம் முடக்கப்படலாம்..

யாழ்.கரவெட்டி தெற்கில் சுமார் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கரவெட்டி சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

கரவெட்டி தெற்கில் உள்ள கரவை மூங்கோடை முருகன் கோவிலில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிகளவானவர்கள் கூடியிருந்த நிலையில் 

சுகாதார பிரிவினரால் அங்கிருந்த சுமார் 170 வரையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில்

49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்ளை

அடையாளம் காணவும் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதி முடக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு