யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் பணிகள் முடக்கம்! சகல ஊழியர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் பணிகள் முடக்கம்! சகல ஊழியர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை..

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பிரதேச செயலகத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அச்சுவேலியை சேர்ந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ஏனைய ஊழியர்களுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 9 பேருக்கு 

தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.  தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 4 பேர் 2 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து,பிரதேச செயலகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாகவும், ஏனைய உழியர்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், 

ஊழியர்களின் பிசிஆர் முடிவுகள் வெளிவந்தபின்னர் பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. 

இதேவேளை மேலும் 40 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பபட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு