பௌத்த பிக்குகள் புடைசூழவந்து பதவியேற்றார் வடமாகாண பிரதம செயலாளர்!

ஆசிரியர் - Editor I
பௌத்த பிக்குகள் புடைசூழவந்து பதவியேற்றார் வடமாகாண பிரதம செயலாளர்!

வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேனா இன்று காலை 11.45 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதன் ஓய்வுபெற்றதை தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் பந்துலசேனா புதிய

பிரதம செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் பிரதம செயலாளராக பதவியேற்றிருக்கின்றார். 

பௌத்த பிக்குகள் புடைசூழ மாகாணசபை பேரவை செயலகத்தில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு வந்த புதிய பிரதம செயலாளர் 

சர்வமத பிரார்த்தனைகளை தொடர்ந்து பதவியேற்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு