யாழ்.மானிப்பாய் - சண்டிலிப்பாய் வீதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்! சில மணி நேரத்தில் சுன்னாகத்தில் மீட்பு, ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் - சண்டிலிப்பாய் வீதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்! சில மணி நேரத்தில் சுன்னாகத்தில் மீட்பு, ஒருவர் கைது..

யாழ்.மானிப்பாய் - சண்டிலிப்பாய் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மதியம் திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று மாலையே மீட்கப்பட்டதுடன் திருடனும் கைது செய்யப்பட்டார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவதுாவது, மானிப்பாய் - சண்டிலிப்பாய் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் நேற்று மாலை திருடப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் உரிமையாளர்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலையே திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த சுன்னாகம் சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸார் 

அதனை வைத்திருந்த நபரை கைது செய்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு