யாழ்.அரியாலை கிழக்கு - பூம்புகாரில் மணல் கடத்தல் கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு! அதிகாலையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.அரியாலை கிழக்கு - பூம்புகாரில் மணல் கடத்தல் கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு! அதிகாலையில் சம்பவம்..

யாழ்.அரியாலை கிழக்கு  பூம்புகார் பகுதியில் பொலிஸார் மணல் கடத்தல் கும்பலை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

குறித்த பகுதியில் மணல் கடத்தல் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மணல் கடத்தல் கும்பல் 

பயணித்த உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து கைது செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை மீறி உழவு இயந்திரம் பயணித்த நிலையில் 

பொலிஸார் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனையடுத்து உழவு இயந்திரம் தடம்புரண்ட நிலையில் அதில் பயணித்த 

மணல் கள்ளர்கள் 3 பேர் தப்பி ஓடியுள்ளனர். தற்போது தப்பி ஓடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதுடன், 

சம்பவத்தில் கைவிடப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு