யாழ்.அராலியில் வாள்வெட்டு குழு அட்டூழியம்! ஆட்டோ தீக்கிரை, வீட்டின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது..

ஆசிரியர் - Editor I
யாழ்.அராலியில் வாள்வெட்டு குழு அட்டூழியம்! ஆட்டோ தீக்கிரை, வீட்டின் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது..

யாழ்.அராலி வடக்கில் நேற்றய தினம் இரவு வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

நேற்றய தினம் இரவு 10.45 மணியளவில் இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை 

உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர். இதனால் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்தவேளை 

குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நிகழும்போது விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் துரத்தியவேளை அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு