யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் தீவிர அபாயத்தில்! மாவட்டத்தில் 22 பேர் உட்பட மாகாணத்தில் 54 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டம் தொடர்ந்தும் தீவிர அபாயத்தில்! மாவட்டத்தில் 22 பேர் உட்பட மாகாணத்தில் 54 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 22 பேர் உட்பட வடமாகாணத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 501 பேருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்  பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 22 பேர்

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 04 பேர், 

(ஒருவர் பிறந்து 17 நாட்களேயான பெண் குழந்தை)பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், நொதேர்ன் சென்றல் வைத்தியசாலையில் ஒருவர்,

வேலணை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்

வவுனியா மாவட்டத்தில் 07 பேர்

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேர்

ஒட்டுசுட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 10 பேர்

பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 03 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 03 பேர்

மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அதேவேளை,புதுக்குடியிருப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், முள்ளிவாய்க்கால் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர்,

வசாவிளான் தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர், ஆகியோரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு