யாழ்.சிறுப்பிட்டி பாடசாலை அதிபருக்கு கொரோனா! அதிபர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டாராம், அதிபர்களுக்கும் தனிமைப்படுத்தல் உண்டா..?

ஆசிரியர் - Editor I
யாழ்.சிறுப்பிட்டி பாடசாலை அதிபருக்கு கொரோனா! அதிபர்கள் கூட்டத்திலும் கலந்து கொண்டாராம், அதிபர்களுக்கும் தனிமைப்படுத்தல் உண்டா..?

யாழ்.சிறுப்பி பிரதேசத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாடசாலை அதிபருடன் தொடர்பில் இருந்த சுமார் 100 கணக்கானோர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். 

குறித்த அதிபர் கடந்த 14.07.2021ம் திகதி யாழ்.கல்வித்திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும்  அதில் 50பேர் பங்குபற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.

இதைவிட குறித்த அதிபர் தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புகளை நடாத்தியுள்ளதோடு பெற்றோர் கலந்துரையாடலையும் நடாத்தியுள்ளார்.மட்டுமன்றி உரும்பிராயில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார். 

இவருடன் தொடர்பில் இருந்த அல்லது இவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இவரது வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இவருடன் திணைக்களத்தில் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள் கல்வி அதிகாரிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை.

குறித்த அதிபரின் பாடசாலையில் முதல்வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. 

அத்துடன் இம்மாதம் 9ஆம் தேதி குறித்த பாடசாலை அதிபர் முதலாவது கொரோனா தடுப்பூசியும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு