யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை உயர்கிறது! யாழ்.பிரதேச செயலர் பிரிவில் அதிக மரணங்கள்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை உயர்கிறது! யாழ்.பிரதேச செயலர் பிரிவில் அதிக மரணங்கள்..

யாழ்.மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மேலும் 5 மரணங்கள் பதிவான நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்திருக்கின்றது. 

யாழ். மாவட்ட செயலக கொவிட்-19 அறிக்கையிடல் பிரிவினரால் வெளியிடப்படும் மாவட்ட கொவிட்-19 நிலவர அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் (ஜூலை-20) இவ்வாறு 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் ஜூலை மாதத்தின் 20 நாட்களில் மட்டும் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளது. ஜூலை - 01 - 04 பேர், ஜூலை - 02 - 02 பேர், ஜூலை - 04 - ஒருவர், 

ஜூலை - 05 - ஒருவர், ஜூலை - 06 - 03 பேர், ஜூலை - 07 - ஒருவர், ஜூலை - 15 - ஒருவர், ஜூலை - 16 - 02 பேர், ஜூலை - 17 - ஒருவர், ஜூலை - 18 - ஒருவர், ஜூலை - 20 - 05 பேர், இவ்வாறு ஜூலை 01-20 வரையான நாட்களில் மேலும் 22 பேர் 

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் யாழ்.மாவட்ட மொத்த உயிரிழப்பு 117 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்டதிதில் இதுவரை ஏற்பட்ட கொவிட்-19 மரணங்கள் தொடர்பான விபரம், மொத்த உயிரிழப்பு பிரதேச செயலர் பிரிவு வாரியாக

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் - 35 பேர்,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 14 பேர்,

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் - 12 பேர், 

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர்,

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் - 10 பேர், 

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் - 09 பேர்,

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் - 08 பேர்,

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் - 06 பேர்,

வேலணை பிரதேச செயலர் பிரிவில் - 04 பேர்,

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் - 03 பேர்,

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் - 02 பேர்,

ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் - ஒருவர் 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு