யாழ்.பருத்தித்துறையில் தற்காலிக இடத்தில் இயங்கிவந்த மீன் சந்தையும் முடக்கம்! தொற்றாளர் அதிகரிப்பால் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் தற்காலிக இடத்தில் இயங்கிவந்த மீன் சந்தையும் முடக்கம்! தொற்றாளர் அதிகரிப்பால் நடவடிக்கை..

யாழ்.பருத்தித்துறை நகரில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் தற்காலிகமாக இயங்கிவந்த பருத்தித்துறை மீன் சந்தையையும் முடக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக நகரில் மேலும் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

மேலும் நகர்பகுதியை முடக்கும் தீர்மானம் கடந்த 14ஆம் திகதி இரவு எடுக்கப்பட்டதால் நகரில் இயங்க முடியாத மீன் சந்தை  கிராமக்கோட்டு சந்தியில் தற்காலிகமாக இயங்கிவந்தது. 

இந்நிலையில் பிரதேசத்தில் தொடர்சியாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில் சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கையாக தற்காலிக இடத்திலும் சந்தையை நடத்தவிடாது

முடக்குவதற்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. மீன் விற்பனையில் ஈடுபட்ட அனைவரும் 14 நாட்கள் நிறைவடையும் வரை வியாபார நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும், கொரோன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே 

மேற்கொண்டு நடவடிக்கை குறித்து அறியத்தரப்படும் எனவும் பருத்தித்துறை சுகாதாரத் தரப்பினரால் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தாகவும் மேலும் தெரிவித்தார்.

பருத்தித்துறை நகர் கொரோனா கொத்தணியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு