யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த! நாவற்குழி, காங்கேசன்துறை விகாரைகளுக்கும் செல்கிறாராம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு இருநாள் விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த! நாவற்குழி, காங்கேசன்துறை விகாரைகளுக்கும் செல்கிறாராம்..

இரு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 31ம் திகதி யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். 

நாவற்குழி ரஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 

182 வீடுகளுக்கான உரிமங்களை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதுடன், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறைக்கு செல்லவுள்ள பிரதமர், காஙகேசன்துறை திஸ்ஸ மஹா விகாரையின் பிக்குமாருக்கான விடுதித் திறப்பு 

மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளையும் கையளிக்கவுள்ளார்.பின்னர், 

வேலனைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர், நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலனையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

மறுநாளான ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயினாதீவு நாகவிகாரை ஆகியவற்றில் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ 

மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.பின்னர், நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ். நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் 

ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர், தாளையடி நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொண்டு 

அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு