வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிரடி இடமாற்றம்..! யாருடைய உருட்டை மறைப்பதற்கு? மாகாண நிர்வாகத்தில் கிசு..கிசுப்பு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண காணி ஆணையாளருக்கு அதிரடி இடமாற்றம்..! யாருடைய உருட்டை மறைப்பதற்கு? மாகாண நிர்வாகத்தில் கிசு..கிசுப்பு..

வடமாகாண காணி ஆணையாளர் குகநாதன் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் வடமாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

குறித்த உத்தரவு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸினால் வழங்கப்பட்டுள்ளதாக தொியவருகின்றது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சுமார் 4 வருடங்களுக்கு மேலாக வடமாகாண காணி ஆணையாளராக செயற்பட்ட குகநாதனை

திடீரென ஆளுநர் வடமாகாண சபைக்கு பணி இடமாற்றம் செய்து கடிதம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குகநாதன் இன் பதவிக்கு வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி வகித்த எஸ்.சோதிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநரின் திடீர் முடிவானது வடக்கு மாகாணத்தின் உயர்நிலை அரச அதிகாரி ஒருவர் அல்லது அவருடைய நெருக்கிய உறவினர் சார்பில் அரச காணி 

கையகப்படுத்தல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதனை மூடி மறைக்க அல்லது அழுத்தத்தை குறைக்கவா மாகாண காணி ஆயைாளர்

இடமாற்றம் நடந்தது என மாகாண நிர்வாக மட்டத்தில் கிசு கிசுக்கப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு