யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்! நேற்றும் 55 பேருக்கு தொற்று, வடக்கில் 68 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் தீவிரம்! நேற்றும் 55 பேருக்கு தொற்று, வடக்கில் 68 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.மாவட்டத்தில் 55 பேர் உட்பட வடக்கில் சுமார் 68 பேருக்கு நேற்றய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

யாழ்.பல்கலைகழக மருத்துவபீட ஆய்வு கூடத்தில் 436 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின்போதே 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது. 

யாழ். மாவட்டத்தில் பேருக்கு தொற்று 55 பேருக்குத் தொற்று

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர்,யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,

சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஒருவர்,

வவுனியா வடக்கில் 10 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் மற்றும் அக்கராயன்குளம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 02 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு