யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 5 பேர் விடுதலை..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 5 பேர் விடுதலை..!

யாழ்.மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்த 5 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோது அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

அச்சுவேலி, இளவாலை,கோப்பாய் மற்றும் கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலையப் பகுதிகளைச் சேர்ந்த 5 சந்தேக நபர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.

இந் நிலையில் குறித்த நபர்களை யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் 

அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு