வீதியால் நடந்து வந்தவர்களை சோதனையிட முயன்ற பொலிஸார் மீது சரமாரி தாக்குதல்! குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
வீதியால் நடந்து வந்தவர்களை சோதனையிட முயன்ற பொலிஸார் மீது சரமாரி தாக்குதல்! குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை..

சந்தேகத்திற்கிடமான முறையில் வீதியால் நடந்து வந்தவர்களை சோதனையிட முயற்சித்தபோது பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் மன்னார் நானாட்டான் - வாழ்க்கை பெற்றான்கண்டல் கிராமத்தில் நேற்று இடம்பெற்றிருக்கின்றது. 

மேற்படி கிராமத்தில் மாட்டு வண்டில் சவாரி இடம்பெற்றிருக்கின்றது. சவாரி நிறைவடைந்த பின்னர் வீதியால் சிலர் நடந்து வந்துள்ளனர். 

இதன்போது அவர்களுடைய நடத்தையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவர்களை வழிமறித்து சோதனையிட முயற்சித்தபோது குறித்த நபர்கள்

பொலிஸார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் சந்தேகநபர்களை தேடுகிறது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு