மன்னார் மாவட்டத்திலிருந்து 1வது பெண் விமானி! 1ம் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்தார்..

ஆசிரியர் - Editor I
மன்னார் மாவட்டத்திலிருந்து 1வது பெண் விமானி! 1ம் கட்ட பயிற்சிகளை நிறைவு செய்தார்..

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல் எவாஞ்சலின் முதலாவது பெண் விமானியாக முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார். 

இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில்

பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation centerColombo Airport) 

முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார். இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக 

மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு