யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.தென்மராட்சி பிரதேச செயலக ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

தென்மராட்சி பிரதேச செயலக திட்டமிடல் அலகில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் முன்னதாக 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 

15 நாட்களுக்கு திட்டமிடல் அலகு முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதே அலகில் நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மேலும் 2 ஊழியர்களுக்கு கொரோனா

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு