யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 28 பேர் உட்பட வடக்கில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று (19) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில்,யாழ்.மாவட்டத்தில் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

அதன் விபரம் வருமாறு, 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 07 பேர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 02 பேர், 

யாழ். சிறைச்சாலையில் ஒருவர்,ப ண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், 

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 06 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் 05 பேர்உருத்திரபுரம் பிரதேச வைத்தியசாலையில் 04 பேர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்திசாலையில் 04 பேர்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் ஆகியோர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு