லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய முதியவர் கொரோனா தொற்றினால் மரணம்!

ஆசிரியர் - Editor I
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய முதியவர் கொரோனா தொற்றினால் மரணம்!

யாழ்ப்பாணத்திற்கு லண்டனிலிருந்து வந்த மருத்துவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

இறப்பின் பின்னர் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த சிற்றப்பலம் இராசலிங்கம் (வயது-80) லண்டனிலிருந்து கடந்த ஜூன் 29ஆம் திகதி அச்சுவேலி திரும்பிய நிலையில் 

கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் உயிரிழந்துள்ளார். அவர் முன்னாள் அச்சுவேலி வைத்தியசாலை அத்தியட்சகர் என்று உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.

அவரது சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 

கொரோனா தொற்று உள்ளதாக நேற்றிரவு அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் முதியவரின் சடலம் 

சுகாதார நடைமுறைகளின் கீழ் மின் தகனம் செய்யப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு