யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்தடை

ஆசிரியர் - Admin
யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ்.வயாவிளான், சென்ஜேம்ஸ் சந்தி, பலாலி தெற்கு, தம்பாலை, தோப்பு, வளலாய் விமான நிலையச் சந்தி, விஜிதா மில், இடும்பன், நிச்சாமம், வைரவர் கோவிலடி, சுழிபுரம், பிரான்பற்று திருமண மண்டபம், அச்சுவேலி நகரம், டச்சு வீதி, மருத்துவமனை வீதி, இடைக்காடு, கதிரிப்பாய், மருதடிச் சந்தி, செல்வ விநாயகபுரம் ஆகிய பகுதிகளிலும்,

இன்று காலை- 08.30 மணியிலிருந்து மாலை-05 மணி வரை யாழ்.கொழும்புத்துறை, நெடுங்குளம், புங்கன்குளம், மணியந் தோட்டம், மணியந் தோட்டம் ஐஸ் தொழிற்சாலை, உதயபுரம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு