யாழ்.மாவட்டத்தில் 7 வயது சிறுமி உட்பட 40 பேருக்கு தொற்று உறுதி, வடக்கில் 63 பேருக்கு தொற்று..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 7 வயது சிறுமி உட்பட 40 பேருக்கு தொற்று உறுதி, வடக்கில் 63 பேருக்கு தொற்று..!

யாழ்.மாவட்டத்தில் 40 பேர் உட்பட வடக்கில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 596 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே மேற்படி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 

இதன்படி பருத்தித்துறை பகுதியில் 7 வயதான சிறுமி ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. 

யாழ்.மாவட்டத்தில் 40 பேர்

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 09 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 08 பேர்,

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், வேலணை பிரதேச வைத்தியசாலையில் 02 பேர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவர்

வவுனியா மாவட்டத்தில் 02 பேர்

மன்னார் மாவட்டத்தில் 04 பேர்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு