யாழ்.வல்வெட்டித்துறையில் தொடரும் அபாயம்! மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.வல்வெட்டித்துறையில் தொடரும் அபாயம்! மேலும் 18 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 19 பேருக்கு

தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. குறித்த 19 பேரில் 18 பேர் வல்வெட்டித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என சுகாதார தரப்பு கூறியுள்ளது. 

அவர்கள் வல்வெட்டித்துறையின் ஆதிகோவிலடி, நாவலடி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார பிரிவு கூறியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு