யாழ்.பருத்தித்துறையில் தொடரும் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனைகள்! மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் தொடரும் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனைகள்! மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி..

யாழ்.பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொர்பில் இருந்தமைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கே அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியானது. 

இன்றைய தினம் 119 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு கூறியுள்ளது. 

பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் பொலிகண்டியைச் சேர்ந்த ஒருவர் என மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு