யாழ்.மாவட்டமே பேராபத்தில்..! தப்பி ஓடிய 76 போினால் மாவட்டம் முழுவதும் கொரோனா அபாயம், தலையிடியில் சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டமே பேராபத்தில்..! தப்பி ஓடிய 76 போினால் மாவட்டம் முழுவதும் கொரோனா அபாயம், தலையிடியில் சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவு..

யாழ்.பருத்தித்துறை நகர் பகுதியில் கொரோனா தொற்று உறுதியான பின்னர் தப்பி ஓடி தலைமறைவான 6 வியாபாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்த 70 பேரும் தலைமறைவானதாக சுகாதார பிரிவினர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருக்கின்றது. 6 பேரும் நேற்றைய தினம் தலைமறைவாயிருந்த நிலையில் அவர்களுடன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள் என

70 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களை தனிமைப்படுத்துவதற்காக சுகாதார தரப்பினர் இன்று காலை தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர்களை தேடிப் பிடித்து 

தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார தரப்பினர் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.தலைமறைவானவர்கள் புத்தளம் மற்றும் அம்பாறை உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தங்களுடைய வியாபாரத் தேவைக்காக வந்து தங்கியிருந்து உள்ளூர் வியாபாரிகளின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி, கொரோனாப் பரவல் சூழலில் இவ்வாறு பொறுப்பற்ற தனத்தில் நடந்துகொண்டுள்ளமை 

பிரதேச மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தைத் தோற்றுவித்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு