யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் தலைமறைவு! கல்முனை, புத்தளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 பேர் தலைமறைவு! கல்முனை, புத்தளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தகவல்..

யாழ்.பருத்தித்துறையில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 6 பேர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். 

பருத்தித்துறை நகர் பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. 

அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி பின்னர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளுக்காக 

சுகாதார பிரிவினர் தேடி சென்றிருந்த நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளமை தொியவந்துள்ளது. 

குறித்த நபர்கள் கல்முனை மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு