யாழ்.வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் ரின்களுடன் புகுந்த இருவர் கைது! இது இரண்டாவது தடவையாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டை கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் ரின்களுடன் புகுந்த இருவர் கைது! இது இரண்டாவது தடவையாம்..

யாழ்.வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா சிகிச்சை நிலையத்திற்குள் பியர் ரின்களுடன் புகுந்த இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர்கள் குறித்த சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வழங்கவென பியர் ரின்களுடன் 

இருவர் சிகிச்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் குறித்த இருவரையும் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் கையளித்தனர். ஆனாலும் அவர்களுக்கும் தொற்று இருக்கலாம்

என்ற அச்சத்தினால் பொலிஸார் தொடக்கத்தில் தயங்கியபோதும் பின்னர் கைது செய்தனர். மேலும் கடந்த வாரமும் இருவர் வெற்றிலைகளுடன் சிகிச்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த போதும் 

அவர்களை மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்க முற்பட்டபோது பொலிஸார் கைது செய்ய பின்னடித்தமையால் , அவர்கள் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டனர். மேற்படி இருவரும் அன்றைய தினம் வெற்றிலைகளுடன் 

கஞ்சா போதை பொருளை கொண்டு வந்திருக்கலாம் எனும் சந்தேகம் அங்கிருந்தவர்களுக்கு ஏற்பட்டு இருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு