யாழ்.மாவட்டத்தில் 9 மாதங்களேயான பெண் குழுந்தை கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 9 மாதங்களேயான பெண் குழுந்தை கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 9 மாத குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 9 மாத பெண் குழந்தை திடீர் சுகயீனம் காரணமாக நேற்றய தினம் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது. 

பின்னர் அங்கிருந்து நேற்றய தினம் இரவு யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது. இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 

குழந்தைக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு