பருத்தித்துறை நகரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! இன்று மட்டும் 14 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறை நகரில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! இன்று மட்டும் 14 பேருக்கு தொற்று..

யாழ்.பருத்தித்துறையில் மேலும் 10 பேருக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் நகர் பகுதி வர்த்தகர்கள் 23 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அதேபோல் 40 பேருக்கு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 3 பொதுமக்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே இரு வங்கி ஊழியர்கள் மற்றும் இரு நகரசபை ஊழியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், 

இன்று மட்டும் பருத்தித்துறை நகரில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் கூறுகின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு