பருத்தித்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! இருவர் வங்கி ஊழியர்கள், இருவர் நகரசபை ஊழியர்கள்..

ஆசிரியர் - Editor I
பருத்தித்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! இருவர் வங்கி ஊழியர்கள், இருவர் நகரசபை ஊழியர்கள்..

யாழ்.பருத்தித்துறையில் இன்று நடத்தப்பட்ட அன்ஜன் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவினர் கூறினர். 

பருத்தித்துறை நகரம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் வங்கிகள், தபாலகங்கள் மற்றும் நகரசபை உள்ளிட்ட அலுவலகங்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவற்றில் பணியாற்றும் 66 பேருக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

அவர்களில் இருவர் பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் எனவும் மற்றய இருவரும் பருத்தித்துறை நகரசபை ஊழியர்கள் எனவும் கூறப்படுகின்றது. 

இதனோடு பருத்தித்துறையில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்திருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு